Saturday 1 August 2015

வீர பெண் உயிர் தப்பினார்! - முதலையுடன் போராட்டம் - இந்தியா - ஒரிசா

வீர பெண் உயிர் தப்பினார்! - முதலையுடன் போராட்டம் - இந்தியா - ஒரிசா

இந்தியாவில் இருக்கும் ஒரிஸா மாநிலத்தில் சாபித்ரி சமால் என்ற பெண்
ஒரு சிறிய ஓடையில் தனது பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்  அப்பொழுது திடீரென்று ஒரு முதலை வந்துவிட்டது. அந்த முதலை அவரை கடித்து அப்புறம் இழுத்து சென்றுவிட்டது. இதனால் அந்த பெண் தான் இறந்து போய்விடுவோமோ என்று நினைத்துள்ளார். இதனால் முடிந்த மட்டும் அதை அடிப்போம் என்று எண்ணி தனது கையால் அதன் தலையை நங்கு நங்கு என்று குத்தியுள்ளார். இந்த அதிரடியை எதிர்பார்க்காத முதலை திடுக்கிட்டதோடு வலி தாங்காமல் அந்த பெண்ணை விட்டுவிட்டது. தப்பி வந்த பெண் இப்பொழுது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறாராம். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.