Wednesday 1 July 2015

வெண்புள்ளி நோய்க்கு - மருந்து கண்டுபிடிப்பு

வெண்புள்ளி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு


ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு  அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். தோலுக்கு நிறத்தை தருவது மெலனின் நிறமியாகும். இதை  உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் இந்தநோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
1.நோய் எதிர்ப்பு சக்தி குறைவது
2. வெயிலில் அதிக நேரம் இருப்பது
3. நெடியுள்ள ரசாயனங்களை கையாளுவது

 போன்ற காரணங்களால் வெண் குஷ்டம் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.


வெண்புள்ளி நோய்தீர
1. லைட் தெரபி,
2. கிரீம்கள்,
3. அறுவை சிகிச்சை
என பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் திருப்திகரமான முன்னேற்றம் கிடைப்பதில்லை.  மூட்டு வலி சிகிச்சைக்குப் பயன்படும் டோபாசிடினிப் எனும் வெளிப்பூச்சு மருந்து, வெண்குஷ்டத்திற்கு நல்ல பலன் கொடுப்பதைக் சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 53 வயது நிரம்பிய நபர் ஒருவருக்குவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு இருந்தது. அவவருக்கு வழக்கமான சிகிச்சை முறைகளால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்த சூழ்நிலையில் அந்த நோயாளிக்கு டோபாசிடினிப் மருந்தை வெளிப்பூச்சு மருந்தாக இரண்டு மாதங்களுக்கு கொடுக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. நோயாளியின் தோள்புறம் மற்றும் கைகளில் காணப்பட்ட வெண்புள்ளிகள் மறையத் ஆரம்பித்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  எனவே இனிமேல் வருங்காலத்தில் வெண்புள்ளி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலனைக் கொடுக்கும் என யேல் பல்கலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

No comments:

Post a Comment