Wednesday 1 July 2015

கணவன் மனைவி சண்டையை நிறுத்த - புதிய மருந்து கண்டுபிடிப்பு

கணவன் மனைவி சண்டையை நிறுத்த - புதிய மருந்து கண்டுபிடிப்பு

திருமணம் ஆகி ஒரு வருடமாகியும் ஒரு தம்பதியர்களுக்கிடைய சண்டைதான். எப்பப்பார்த்தாலும் அவர்களுக்குள்ளே சண்டைதான்.  அவர்கள் திருந்தியபாடில்லை. அதனால் அருகில் இருக்கும் சாமியாரிடம் மனைவி மட்டும் சென்று முறையிட்டால். எங்களுக்கிடையே இனிமேல் சண்டை வராமல் இருக்க நீங்கதான் உதவி செய்யனும் என்றாள். சாமியாரும் அப்படியா சரி என்று சொல்லிவிட்டு அடுத்த ரூம்க்கு சென்று ஒரு பாட்டில் நிறைய மருந்து எடுத்து வந்தார். அந்த மருந்தை அந்த பெண்ணிடம் தந்தார். உன்கணவர் எப்பொழுதெல்லாம் கோபமாக பேசுகிறாரோ அப்பொழுதெல்லாம் இதில் ஒரு மடக்கு வாயில் வைத்துக்கொள்ளவும். முழுங்கிவிடக்கூடாது. உன் கணவர் கோபமாக கத்தி முடித்ததும் வாயில் இருக்கும் மருந்தை முழுங்கி விடலாம் என்று சொன்னார். அந்தப் பெண்ணும் ஒரு வாரமாக அதைக் கடைப்பிடித்தாள். சாமியார் சொன்னபடியே எந்த சண்டையும் வராமல் ஒரு வாரம் போய்விட்டது. எனவே மறுபடியும் அந்த சாமியாரைப் பார்த்து நீங்கள் தந்த மருந்து நல்ல வேலை செய்யுது. என் கணவர் இப்பொழுது சண்டையிடுவதில்லை அதனால் மறுபடியும் அந்த மருந்து ஒரு பாட்டில் தாங்கள் சாமியாரே என்றாள். சாமியார் சொன்னார். அந்த மருந்து செய்வது எளிய முறைதான். கொஞ்சம் சர்கரையை தண்ணீரில் கலந்தால் போதும். அது வெறும் சர்க்கரை தண்ணீர்தான். வேறோன்றும் இல்லை. இதை நீங்களே வீட்டில் எளிதாக தயார் செய்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment