Sunday 5 July 2015

கீழாநெல்லி செடி பயன்கள்


மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி







மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி
கீழாநெல்லியின் பயன்கள் - கீழாநெல்லி செடி
கீழாநெல்லியின் பயன்கள்  கண்நோய், பித்தநோய்,மஞ்சள் காமாலை,  போகவும், சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் கீழாநெல்லி செடி பயன்படுகிறது.தீராத தலைவலி, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும். கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.நெல்லிக்காய் 30 கிராம், 4 மிளகுடன் இடித்து 2 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் உடல் சூடு, காய்சல், தேக எரிச்சல் தீரும்.இந்த இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும். கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். கீழாநெல்லி செடி

No comments:

Post a Comment