Friday 3 July 2015

முள்ளங்கி மருத்துவக் குணங்கள்

முள்ளங்கியில் இரண்டு வகைகள் உண்டு அவை சிகப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி ஆகியன.முள்ளங்கியில் கீழ்கண்ட சத்துக்கள் உள்ளன.

கலோரி – 17 கிராம், நார்ச்சத்து – 2 கிராம் , வைட்டமின் சி – 15 மில்லி கிராம்
கால்சியம் – 35 மில்லி கிராம் , பாஸ்பரஸ் – 22 மில்லி கிராம்
காய்கறிளிலேயே வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ்  கியனஅதிகளவில் இருப்பது இந்த முள்ளங்கியில்தான்.

முள்ளங்கி கீரையிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அவைகள்

100 கிராம் கீரையில்
கலோரி – 41 கிராம் , புரதம் – 3.8 கிராம் , நார்ச்சத்து – 1 கிராம்
வைட்டமின் சி – 81 மில்லி கிராம் , கால்சியம் – 400 மில்லி கிராம்
பாஸ்பரஸ் – 59 மில்லி கிராம்

முள்ளங்கியின் சிறப்பம்சங்கள்

1. முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்தால் உடலில் தாதுபலம் அதிகமாகும்.
2. சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் முள்ளங்கி கரைத்து விடும்.
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை தருவது முள்ளங்கியாகும்
4. வயிற்றில் வலி, வயிற்றில எரிச்சல் ஏற்படும்பொழுது முள்ளங்கியைச் சாப்பிட்டு குணமாக்கலாம்
5.  தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் இந்த முள்ளங்கி நீங்கி விடும்.
6. முள்ளங்கியைத் நசுக்கி சாறு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
7. முள்ளங்கியில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (phytonutrients) தாதுச் சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் செயல்படக்கூடியவை
100 கிராம்  முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் போகும்.

முள்ளங்கி சாறு தயாரிக்கும் விதம்

100 கிரதம் முள்ளங்கியை எடுத்து சுத்தம் செய்துகொள்ளவும் அதனை  சின்னசின்னதாக வெட்டிக் கொள்ளுங்கள்.அப்புறம் அவற்றை சட்டியில் போட்டு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதில் மிளகு சீரகம் ஒரு சிட்டிகையளவு போட்டு வடிக்கட்டி ஒரு டம்ளர் அளவு முள்ளங்கி சாறு எடுத்து சாப்பிடலாம்.தேவைப்படுவோர் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இவற்றின் பயன்பாடுகள்

சிறுநீரைப் பெருக்கும், நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும்.
தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வாத நோய்நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா போன்றவைகள் குணமாகும். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

No comments:

Post a Comment