Tuesday 7 July 2015

செய்யக்கூடாத விஷயங்கள் நீங்கள் அறிந்திட

செய்யக்கூடாத விஷயங்கள் நீங்கள் அறிந்திட
 விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்). பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம். அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல. லட்சுமிக்குத் தும்பை கூடாது.பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

No comments:

Post a Comment